நீலகிரி : கோடநாடு குற்றவாளிகளுக்கு சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் உள்ளதாக நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளிகளில் ஒருவான வாளையார் மனோஜ் பேட்டி அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி : கோடநாடு குற்றவாளிகளுக்கு சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் உள்ளதாக நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளிகளில் ஒருவான வாளையார் மனோஜ் பேட்டி அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பி. வடமலை, இந்த வழக்கு விசாரணையைக் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த வாளையார் மனோஜ், "கோடநாடு குற்றவாளிகளுக்கு சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் உள்ளது. எடப்பாடி ஆட்களான இரு மலையாளிகள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்," என்றார். ஏற்கனவே, கோடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக வாளையாறு மனோஜ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், முதலமைச்சரின் அடியாட்கள் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்திருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதனிடையே, கோடநாடு வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என வாளையார் மனோஜ் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பி. வடமலை, இந்த வழக்கு விசாரணையைக் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த வாளையார் மனோஜ், "கோடநாடு குற்றவாளிகளுக்கு சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் உள்ளது. எடப்பாடி ஆட்களான இரு மலையாளிகள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்," என்றார். ஏற்கனவே, கோடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக வாளையாறு மனோஜ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், முதலமைச்சரின் அடியாட்கள் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்திருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதனிடையே, கோடநாடு வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என வாளையார் மனோஜ் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் தெரிவித்தார்.