சூலூர் இடைத்தேர்தல் : ரூ. 10,000-த்தை சில்லறை காசுகளாக எடுத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட ஒவ்வொரு வாக்காளர்களிடமும் தலா ஒரு ரூபாய் பெற்று, வேட்புமனு தாக்கலுக்கான டெபாசிட் தொகையை சில்லறையாக எடுத்து வந்து சுயேட்சை வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.


கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட ஒவ்வொரு வாக்காளர்களிடமும் தலா ஒரு ரூபாய் பெற்று, வேட்புமனு தாக்கலுக்கான டெபாசிட் தொகையை சில்லறையாக எடுத்து வந்து சுயேட்சை வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் கோவை மாவட்டம் எளச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற சமூக ஆர்வலர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு சார்பில், 'மலரட்டும் அறம் சார்ந்த அரசியல்' என்ற முழக்கத்தை முன்வைத்து பிரபாகரன் தேர்தலில் களம் காண்கிறார். 



பிரபாகரன் தன்னுடைய வேட்புமனு டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கு மக்களிடமே கையேந்தியிருக்கிறார். டெபாசிட் தொகை ரூ. 10,000 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், சூலூர் தொகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தலா ஒரு ரூபாய் என தந்து டெபாசிட் தொகையைக் கட்டுவதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரபாகரன். வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாகவும், பொதுமக்களை நேரடியாக சந்தித்தும் நிதி வசூல் செய்து வந்தார். 

இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களிடம் வசூலித்த தொகையான 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை, 10 ரூபாய் நாணயங்களாக தட்டில் ஏந்தியபடி, ஊர்வலமாக இருசக்கர வாகனத்தில் வந்த சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன், அதனை சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் வழங்கி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வழங்கிய நாணயங்களை 6 அதிகாரிகள் எண்ணி சரிபார்த்தனர். பத்து ரூபாய் நாணயங்களை பல இடங்களில் வாங்க மறுக்கும் நிலையில், தேர்தல் டெபாசிட் தொகையை பத்து ரூபாய் நாணயங்களாக வழங்கியுள்ளார்.

சுயேட்சை வேட்பாளரான பிரபாகன் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், லஞ்சம், ஊழல் மற்றும் மது உள்ளிட்டவற்றிக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தக் கோரி 12 நாட்களும், ஜல்லிக்கட்டிற்காக டெல்லியில் 4 நாட்களும் அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது :- மக்களிடையே நிதி வாங்கி போட்டியிடுகின்றேன். சாதாரண மக்களும் தேர்ரதலில் போட்டியிடலாம் என்பதற்காக மக்களிடம் ஒரு ரூபாய் நிதி பெற்று போட்டியிடுகின்றேன். 10 ரூபாய் நாணயத்தை பொதுமக்கள் வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 10 ஆயிரம் ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயத்தை வைப்பு தொகையாக செலுத்தி இருக்கின்றேன். பொதுமக்கள் பிரச்சினையை முன் வைத்து தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றேன், எனக் கூறினார். 

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கான 5-வது நாளான இன்று மட்டும், தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவன், இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பொன். கார்த்திகேயன், சென்னையைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் சந்தோஷ்குமார், அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன், தமிழக மக்கள் ஒற்றுமை கழகம் சார்பில் சின்ராஜ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...