இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன் சந்தேகத்திற்குரிய இளைஞர் கோவை வந்தாரா..? : என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவை : 250-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமையினர் கோவையில் விசாரணைகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கோவை : 250-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமையினர் கோவையில் விசாரணைகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், 250-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, இந்திய உளவுத்துறை ஏற்கனவே இலங்கைக்கு தகவல்கள் அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு இருப்பதையொட்டி, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களையும் கண்காணித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சக்திசேனா அமைப்பின் தலைவர் அன்புமாரி ஆகியோரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், முகமது ஆஷிக், சம்சுதீன், முகமது சலாவுதீன், ஜாபர் சாதிக் அலி, சாகுல் ஹமீது உள்ளிட்ட 6 பேரை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பாக என்.ஐ.ஏ. சார்பில் சென்னை, கோவை, திண்டிவனம் பகுதிகளில் உள்ள கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகளில் சோதனையிட்டனர். அதில், பென் டிரைவ்கள், சிடிக்கள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கைது செய்யப்பட்ட ஆறு பேருடன் மேலும் சிலர் சமூகவலைதளம் மூலம் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையினர் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இலங்கையில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவை வந்துள்ளதாகவும், கோவையில் பல்வேறு இடங்களுக்குச் சென்ற அவர் பலரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த நபர் யார்..?, எதற்காக கோவை வந்து சென்றார்..? என்பது குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...