திருப்பூரில் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை : தந்தை, மகள் உயிரிழப்பு, தாய் உயிருக்குப் போராட்டம்

திருப்பூர் : திருப்பூர் அருகே கடன் தொல்லையால் மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் : திருப்பூர் அருகே கடன் தொல்லையால் மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் அருகே பெருந்தொழவு கவுண்டம்பாளையம் பகுதியில் அஹமத் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து வருபவர் சதீஷ்குமார். இவர் தனது மனைவி தவமணி மற்றும் 3-வயது மகள் மோனிகாவுடன் அதே தோட்டத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். கோவை மாவட்டம் கும்பாலபட்டியில் சதீஷ்குமார் இருந்த போது, கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி தர கந்துவட்டிகாரர்கள் தொல்லை தந்ததால் மனமுடைந்த சதீஷ்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார்.



இதையடுத்து, தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரையை மனைவியுடன் சேர்ந்து விழுங்கி கொண்டு, 3 வயது குழந்தை மோனிகாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு, தந்தை சதீஷ்குமாரும் அதே தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், போராடிக் கொண்டிருந்த தவமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த அவிநாசிபாளையம் போலீசார் சதீஷ்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...