கோவை : நூற்பாலை இயந்திரத்தில் கைவிட்டதால் விரல்கள் துண்டான தங்களது 4 வயது மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவிட கோரி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
கோவை : நூற்பாலை இயந்திரத்தில் கைவிட்டதால் விரல்கள் துண்டான தங்களது 4 வயது மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவிட கோரி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், ஹேமா தம்பதிகள். கோவை சோமனூர் பகுதியில் உள்ள நூற்பாலை ஒன்றில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த 6-ம் தேதி இவர்களது 4 வயது மகன் ரித்தீஷ் பாண்டி மில்லில் விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த இயந்திரத்தில் கையை விட்டுள்ளார். இதில், பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மில் நிர்வாகத்தினர் சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை தாமதமான நிலையில், சிறுவனின் இடது கையில் இருந்த 4 விரல்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, மருத்துவ சிகிச்சைக்காக 10 ஆயிரம் ரூபாயை பெற்றோருக்கு முன்பணமாக கொடுத்த மில் நிர்வாகம், மேற்கொண்டு பணம் கொடுக்க முடியாது என கைவிரித்து விட்டதாகத் தெரிகிறது. இதனால், குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
"கூலித்தொழிலாளிகளான நாங்கள் கையில் உள்ள பொருட்களை அடகு வைத்து, குழந்தைக்கு தற்போது வரை சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும், சிகிச்சை உதவிகள் கிடைத்தால் தங்கள் மகனுக்கு செயற்கை கை பொறுத்த முடியும். இதன்மூலம், தனது மகனின் எதிர்காலம் காப்பாற்ற முடியும்," என கண்ணீர் மல்க அந்தப் பெற்றோர் தெரிவித்தனர்.
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த முருகேசன், ஹேமா தம்பதிகள். கோவை சோமனூர் பகுதியில் உள்ள நூற்பாலை ஒன்றில் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த 6-ம் தேதி இவர்களது 4 வயது மகன் ரித்தீஷ் பாண்டி மில்லில் விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த இயந்திரத்தில் கையை விட்டுள்ளார். இதில், பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மில் நிர்வாகத்தினர் சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை தாமதமான நிலையில், சிறுவனின் இடது கையில் இருந்த 4 விரல்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, மருத்துவ சிகிச்சைக்காக 10 ஆயிரம் ரூபாயை பெற்றோருக்கு முன்பணமாக கொடுத்த மில் நிர்வாகம், மேற்கொண்டு பணம் கொடுக்க முடியாது என கைவிரித்து விட்டதாகத் தெரிகிறது. இதனால், குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
"கூலித்தொழிலாளிகளான நாங்கள் கையில் உள்ள பொருட்களை அடகு வைத்து, குழந்தைக்கு தற்போது வரை சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும், சிகிச்சை உதவிகள் கிடைத்தால் தங்கள் மகனுக்கு செயற்கை கை பொறுத்த முடியும். இதன்மூலம், தனது மகனின் எதிர்காலம் காப்பாற்ற முடியும்," என கண்ணீர் மல்க அந்தப் பெற்றோர் தெரிவித்தனர்.