கோவை : சோமனூர் பகுதியில் விசைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென சூலூர் இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
கோவை : சோமனூர் பகுதியில் விசைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென சூலூர் இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக சுகுமார் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் அ.ம.மு.க. ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை, திருப்பூர், நிலகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, சூலூர் தொகுதிக்கான அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும். சூலூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். வெற்றி பெற்றால் சூலூர் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன்.
சோமனூர் விசைத்தறி பூங்கா, சூலூர் குளங்கள், தூர்வாருதல், வணிக வரி அலுவலகம் அமைத்தல், அரசு மருத்துவமனை மேம்பாடு உள்ளிட்டவற்றிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன், என அவர் தெரிவித்தார்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள சமத்தூரை சேர்ந்த சுகுமார், 2009 முதல் 2014 வரை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தற்போது, அ.ம.மு.க. கோவை மாவட்ட புறநகர் மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக சுகுமார் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் அ.ம.மு.க. ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை, திருப்பூர், நிலகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, சூலூர் தொகுதிக்கான அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெறும். சூலூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். வெற்றி பெற்றால் சூலூர் பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பேன்.
சோமனூர் விசைத்தறி பூங்கா, சூலூர் குளங்கள், தூர்வாருதல், வணிக வரி அலுவலகம் அமைத்தல், அரசு மருத்துவமனை மேம்பாடு உள்ளிட்டவற்றிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன், என அவர் தெரிவித்தார்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள சமத்தூரை சேர்ந்த சுகுமார், 2009 முதல் 2014 வரை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தற்போது, அ.ம.மு.க. கோவை மாவட்ட புறநகர் மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.