கோவை : தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தினால், வரும் மே மாதம் 23-ம் தேதி வரை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தினால், வரும் மே மாதம் 23-ம் தேதி வரை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் காரணமாக தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்தது. இதனால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாத காலமாக மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவில்லை. மக்களவை தேர்தல் முடிவு பெற்றாலும் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. மே 23-ம் தேதி தான் வாக்குகள் எண்ணப்படும். மேலும், காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 23-ம் தேதி வரை திங்கட்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறாது. தேர்தல் முடிவுகள் வெளியாகி தேர்தல் விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டால்தான், மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.