திருப்பூர் : திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்போடு, கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : திருப்பூர் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்போடு, கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி பேசியதாவது :- மத்திய துணை ராணுவப்படையினர் மற்றும் காவல்துறையினர் 24 மணிநேர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். சி.சி.டி.வி. மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையத்திற்குள் அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தை காண்பித்தது குறித்து எழுத்துப்பூர்வமான புகார் வரும்பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெங்கிட்டாபுரம் பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக வந்த தகவலையடுத்து, அதிகாரிகள் உடனடியாக அனுப்பப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சுமூக முடிவெடுக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் வாக்களிக்கச் சென்றனர், எனத் தெரிவித்தார்.