கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள பிளாக் தண்டர் தீம் பார்க் மற்றும் தண்டர் வோல்டுக்கு நான்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள பிளாக் தண்டர் தீம் பார்க் மற்றும் தண்டர் வோல்டுக்கு நான்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
பிளாக் தண்டர் தீம் பார்க்கிற்கு 2018-2019 ஆண்டிற்கான சிறந்த தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதுனை மும்பை எக்ஜ்பிசன் சென்டரில் நடைபெற்ற விழாவில், பிளாக் தண்டரின் செயல் இயக்குநர் வின்சென்ட் அடைக்கல்ராஜ் பெற்றுக்கொண்டார். இந்த விருதானது அவருடைய உயர்ந்த நோக்கத்தையும், கடின உழைப்பையும் தொழில் அனுபவத்தையும் வைத்து பிளாக் தண்டர் தீம் பார்க் ஒரு தனித்தன்மையைக் கொண்டு செயல்படுத்துவதற்காக வழங்கப்பட்டது. பிளாக் தண்டரில் விளையாடுபவர்களுக்கு பொழுது போக்குக்காக மட்டும் அல்லாமல், மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. ஏனெனில், இங்கு வாட்டர் ரைடு, மைண்ட் புளொயிங் டிரை ரைடு, படகு சவாரி, லீசர் ஹோட்டல் மற்றும் பல இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டுகளில் பிளாக் தண்டர் நிறுவனமானது பல்வேறு விருதுகளை ஐ.ஏ.ஏ.பி.ஐ. என்ற அமைப்பிடமிருந்து பெற்றுள்ளது.
விருது பெற்றது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றில் வின்சென்ட் அடைக்கலராஜ் கூறியதாவது:- இதுபோன்ற வாட்டர் தீம் பார்க்கில் புதிது புதிதான மெய்சிலிர்க்க வைக்கும் விளையாட்டுகளை உருவாக்குவதாலும், புதுப்புது வித்தியாசமான விளம்பரங்கள் மூலமாகவும் மட்டுமே அம்யூஸ்மென்ட் இன்டஸ்ட்ரீஸ் மென்மேலும் உருவெடுக்கும். பிளாக் தண்டர் மற்றும் தண்டர் வோல்டு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்று தேவைகளை நிறைவேற்றுவதால், வாடிக்கையாளர்கள் செல்லும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்கின்றனர், என்கிறார்.