குன்னூரில் மின்கம்பி உரசியதில் வீட்டின் மீது விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மின்கம்பி உரசியதில் வீட்டின் மேல் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மின்கம்பி உரசியதில் வீட்டின் மேல் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குன்னூர் அருகே உள்ள ஒதனட்டி கிராமத்தை சோ்ந்தவர்கள் சசிகுமார், வைதேகி தம்பதியினர். இவர்களுக்கு பிரவீன் (14), நவீன் (8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிரவீன் அருவங்காடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். 



நவீன் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், பிரவீன் தங்களது வீட்டின் மேற்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் அருகே உள்ள வீட்டில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. வீட்டின் மேற்புறம் மின் கம்பி இருந்தை அறியாமல், சிறுவனின் கழுத்து மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியது. இதனால், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான். 



ஆனால், வீட்டின் அருகே யாரும் இல்லாததால் சுமார் ஒரு மணிநேரம் பிரவீன் மின்கம்பியில் தொங்கியபடி இருந்துள்ளான். அப்போது, அவ்வழியாக வந்த கிராம மக்கள் உடனடியாக மின்சார வாரியத்திற்கும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்களும், போலீசாரும் மின் இணைப்பை துண்டித்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்கம்பி தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...