மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.02 கோடி பறிமுதல்

கோவை : மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்களின்றி வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே இரண்டு லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை : மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்களின்றி வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே இரண்டு லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.



மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனியார் செக்யூரிட்டி வேன் ஒன்று வந்த போது, அதனை தடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில், வாகனத்தில் சுமார் ஒரு கோடியே 2 லட்சத்து 26 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பணத்திற்கான ஆவணங்கள் குறித்து வாகனத்தில் இருந்த நான்கு பேரிடம் விசாரித்த போது, இது வங்கி ஏ.டி.எம்.மில் செலுத்தக் கொண்டு செல்லப்படும் தொகை என்றும், வேறு ஆவணங்கள் ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், பணம் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அவ்வகத்திற்குக் கொண்டு சென்றனர். இதன் பின்னர் விசாரணை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...