கோவை : தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல் வழக்கில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கைது செய்யப்படுவார் என தொண்டாமுத்தூர் பிரச்சாரத்தின் போது தி.மு.க.தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை : தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல் வழக்கில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கைது செய்யப்படுவார் என தொண்டாமுத்தூர் பிரச்சாரத்தின் போது தி.மு.க.தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொள்ளாச்சி தி.மு.க. வேட்பாளர் சண்முக சுந்தரத்திற்கு ஆதரவாக தொண்டாமுத்தூரில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- அமைச்சர் வேலுமணியின் ஊழல்கள் குறித்த பல ஆதாரங்கள் கிடைத்து இருக்கின்றது. இப்போது அவற்றை வெளியிட்டால் நடவடிக்கை இருக்காது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஆதாரங்களை கொண்டு, வேலுமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய பார் நாகராஜன் என்பவர் துணிச்சலாக இருப்பதற்கு வேலுமணி கொடுக்கும் தைரியம்தான் காரணம். இதுவரை பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை. அமைச்சர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கு ஆதரவாகவும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகின்றது. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் சி.பி.ஐ. விசாரணை கண்டிப்பாக நடத்தப்படும், எனக் கூறினார்.