கோவை : நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று கோவையில் பிரச்சாரம் செய்கிறார்.
கோவை : நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று கோவையில் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தே.மு.தி.க., ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளன. இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வரும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார்.
தூத்துக்குடியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, சிவகங்கை மற்றும் கோவையிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் எச். ராஜா மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆதரவாக அமித் ஷா வாக்கு சேகரிக்க உள்ளார். கோவை சிவானந்த காலனியில் மாலை 5 மணிக்கு நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, சி.பி. ஆரை ஆதரித்து அமித்ஷா வாக்கு சேகரிக்கிறார்.
தொடர்ந்து 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தமிழகம் வர உள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.