கோவையில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி

கோவை : ஆலந்துறை அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 62 வயதுடைய முதியவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை : ஆலந்துறை அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 62 வயதுடைய முதியவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை மாவட்டம் ஆலந்துறை காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட முல்லாங்காடு வீரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில், உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த குமாரசாமி (62) என்ற முதியவர் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த முதியவர் குமாரசாமி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதேபோல, மாங்கரையில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த சின்னராஜ் என்பவர் காட்டெருமை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். பின்னர், அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதனிடையே, மனித - வனவிலங்கு மோதலை தவிர்க்க, வனப்பகுதிகளுக்கோ அல்லது நீர்நிலைகளுக்கோ செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...