கோவையின் வனவளங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டுத் தீ

கோவை : கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள பசுமை வளங்களை அழிக்கும் விதமாக அடிக்கடி காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.

கோவை : கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள பசுமை வளங்களை அழிக்கும் விதமாக அடிக்கடி காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்ட வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை தடுக்க வனத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், கடந்த இரண்டு தினங்களாக கோவை மாவட்ட வனப்பகுதியில் காட்டுத் தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இது, தொடர்ச்சியாக 3-வது காட்டுத்தீ விபத்தாகும். 



நேற்று இரவு நரசிபுரம் மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வந்த நிலையில், தடாகம் பகுதியில் உள்ள தூமனூர் மலைக்கிராம வனப்பகுதியில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. கோவை வனப்பகுதிக்குட்பட்ட இந்தப் பகுதியில் பற்றி எரிந்து வரும் இந்த தீயை வனத்துறையினர் இன்று காலை முதல் போராடி அணைக்கத் தொடங்கினர். இந்த தீவிபத்தில் வனவிலங்குகளுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாவிட்டாலும், கடந்த இரண்டு மாதங்களாக பசுமையான வளங்கள் நாசமாகி வருகின்றன. நூற்றுக்கணக்கான மரங்கள் இந்தத் தீயில் கருகி போய்விட்டன. 

"கோவை வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், மழைப் பொழிவு இருந்தால், செடிகள் புத்துயிர் பெற ஆரம்பிக்கும்," என்றனர் வனத்துறையினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...