விண்வெளியில் மிஷன் சக்தி என்ற தாக்குதலை இன்று அரங்கேற்றியுள்ளது இந்தியா : பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி : விண்வெளியில் மிஷன் சக்தி என்ற தாக்குதலை இந்தியா இன்று அரங்கேற்றியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லி : விண்வெளியில் மிஷன் சக்தி என்ற தாக்குதலை இந்தியா இன்று அரங்கேற்றியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு முக்கிய தகவலை இன்று தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர், பிரதமர் மோடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது :- விண்வெளியில் மிஷன் சக்தி என்ற ஆபரேஷன் மூலம் 3 நிமிடங்களில், செயற்கைக்கோளை இன்று இந்தியா தாக்கி அழித்துள்ளது. இன்று இந்தியாவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. 300 கி.மீ தொலைவில் தாழ் நீள்வட்டப்பாதையில் வந்த செயற்கைக்கோள் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியது. நமது நாட்டின் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. விண்வெளி சாதனை நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு இன்று இடம் கிடைத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பிறகு செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை இந்தியா சிறப்பாக கையாண்டுள்ளது. இதன்மூலம், இந்தியா விண்வெளித்துறையில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விண்வெளித்துறையில் ஆயுதம் கூடாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு.

ஆனால், விண்வெளியில் எதிரிகளை எதிர்கொள்ளும் ஆயுதம் இந்தியாவிடம் தற்போது உள்ளது. நாட்டு மக்களுக்கும், மிஷன் சக்தியில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள், என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...