கோவை : பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
கோவை : பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கூறியதாவது :- பெற்றோர் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இந்த சிறுமியின் பெற்றோர் ஊராட்சி பகுதிகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அவர்கள், அரசிடம் உரிய நிவாரணம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பும், மக்களின் முன்பும் நிறுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். போராட்டத்திற்கு முன்பு எந்த அளவிற்கு விரைவு நடவடிக்கை எடுக்க முடியுமோ, அந்த அளவிற்கு நடவடிக்கை எடுப்போம், என தெரிவித்தார்.