கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற முதல்நிலை தணிக்கை ஆய்வாளர் கோவிந்தன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற முதல்நிலை தணிக்கை ஆய்வாளர் கோவிந்தன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்., 18-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி முதல் தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. பலவேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தொடர்ந்து வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற முதல்நிலை தணிக்கை ஆய்வாளர் கோவிந்தன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். கோவில்பாளையம் அருகே உள்ள அருகம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ராதாமணி. இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.
“இந்த தேர்தலில் முதல் முறையாக பி.எஸ்.பி சார்பில் யானை சின்னத்தில் போட்டியிட உள்ளேன். பாபா சாஹிப் அம்பேத்கர் தான் மக்களுக்கு ஓட்டு உரிமையை பெற்று தந்தவர். அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தலில் போட்டியிடுகின்றேன்,” என பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கோவிந்தன் தெரிவித்தார்.