உதகையில் நெடுஞ்சாலை பணியின் போது கம்பி சரிந்து விழுந்த விபத்தில் வடமாநில தொழிலாளி படுகாயம்

நீலகிரி : உதகையில் நெடுஞ்சாலை வேலை செய்து கொண்டிருக்கும் போது, கம்பி சரிந்து விழுந்த விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி : உதகையில் நெடுஞ்சாலை வேலை செய்து கொண்டிருக்கும் போது, கம்பி சரிந்து விழுந்த விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் படுகாயம் அடைந்தார்.



நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து உதகை வரை தேசிய நெடுஞ்சாலை சார்பில் சாலைகளை அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உதகை லவ்டேல் பகுதியில் பெரிய பாலம் ஒன்று அமைக்கும் பணியினை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வந்தனர். அப்போது, கான்க்ரீட் தளம் அமைப்பதற்காக கம்பி கட்டும் பணி நடைபெற்று வந்தது. திடீரென கம்பி சரிந்து விழுந்த விபத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சம்சுல் (30) என்பவர் கம்பி இடுக்குகளில் மாட்டிக் கொண்டார். இதில், அவரது கை, கால், கழுத்து தொண்டை உள்ளிட்ட பகுதிகளில் கம்பி குத்தியதால் பலத்த காயம் ஏற்பட்டது. 



இதனைத் தொடர்ந்து, அவருடன் பணி செய்யும் சக பணியாளர்கள் அவரை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...