கோவை தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி உள்ள மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வாகனங்கள்

கோவை : மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வாகனங்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டன.

கோவை : மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வாகனங்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டன. 



வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய குடியரசு கட்சியுடன், மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட தொகுதிகள் அடங்கிய வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வரும் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் அது பற்றிய உண்மை தெரிந்துவிடும். 



மேலும், மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன், தனது சொந்த ஊரான பொள்ளாச்சியில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொள்ளாச்சி தொகுதிக்கு இன்னும் வேட்பாளரையே அறிவிக்காத நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார வாகனங்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டன. மினி டெம்போக்களில் மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் ஒட்டியபடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் அதிகாரியின் அனுமதி கிடைத்தவுடன் மக்கள் நீதி மய்யம் பொள்ளாச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறது. 

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...