கோவை : கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கோவை : கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ கனகராஜ் (64) மாரடைப்பால் மரணம் அடைந்தார். இன்று காலை நாளிதழ் படித்துக்கொண்டு இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையேயும், சூலூர் பகுதியை சேர்ந்தவர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவரது உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர் இன்று கோவை வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது