திருப்பூர் : அ.தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் முதன்மையான வெற்றியை பெற்றுத் தரும் என அமைச்சர் செங்கோட்டையன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : அ.தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் முதன்மையான வெற்றியை பெற்றுத் தரும் என அமைச்சர் செங்கோட்டையன் பிள்ளை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார் . அதனடிப்படையில், இன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் அமைச்சர்கள் கருப்பண்ணன், செங்கோட்டையன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறையினரை சந்தித்து ஆதரவு கோரினார்.
அப்போது, தொழில்துறையினர் மத்தியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “திருப்பூருக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் இரண்டாவது, மூன்றாவது குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. நான்காவது திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளதால், திருப்பூரை சிங்கப்பூராக மாற்ற வேண்டியதே நம் அரசின் நோக்கம்,” என பேசினார்.

மேலும், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தொழில்துறையினருக்காக அம்மா செய்துள்ள நலத்திட்டங்களால் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். அதில், திருப்பூர் தொகுதி முதன்மையான தொகுதியாக இருக்கும்,” என பேட்டியளித்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார் . அதனடிப்படையில், இன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் அமைச்சர்கள் கருப்பண்ணன், செங்கோட்டையன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்துறையினரை சந்தித்து ஆதரவு கோரினார்.
அப்போது, தொழில்துறையினர் மத்தியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “திருப்பூருக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் இரண்டாவது, மூன்றாவது குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. நான்காவது திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளதால், திருப்பூரை சிங்கப்பூராக மாற்ற வேண்டியதே நம் அரசின் நோக்கம்,” என பேசினார்.

மேலும், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தொழில்துறையினருக்காக அம்மா செய்துள்ள நலத்திட்டங்களால் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். அதில், திருப்பூர் தொகுதி முதன்மையான தொகுதியாக இருக்கும்,” என பேட்டியளித்தார்.