தொண்டாமுத்தூரில் உரிய ஆவணமில்லாத ரூ. 5.50 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

கோவை : தொண்டாமுத்தூர் பகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5.50 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

கோவை : தொண்டாமுத்தூர் பகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5.50 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.



கோவை - வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலை லட்சுமி நகர் பகுதியில் அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் பறக்கும் படையினர் இன்று சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, சி.எம்.எஸ் இன்போ சிஸ்டம் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த வாகனத்தை ஓட்டி வந்த சந்தோஷ் என்பவரிடம் இருந்து, உரிய ஆவணங்கள் இல்லாத சுமார் ரூ. 5.50 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்தப் பணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டது.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சி.எம்.எஸ் இன்போ சிஸ்டம் என்ற தனியார் நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தேர்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதால், முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, இந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...