கோவை : நொய்யல் ஆற்றை தொடர்ந்து அசுத்தப்படுத்துவதைத் தடுக்காத காருண்யா பல்கலைக்கழகத்தின் வாயில் முன்பு ஒரு டன் எடையுள்ள குப்பைகளை சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கொட்டினர்.
கோவை : நொய்யல் ஆற்றை தொடர்ந்து அசுத்தப்படுத்துவதைத் தடுக்காத காருண்யா பல்கலைக்கழகத்தின் வாயில் முன்பு ஒரு டன் எடையுள்ள குப்பைகளை சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கொட்டினர்.
கோவை - சிறுவாணி சாலையின் காருண்யா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களுக்காக, அங்கு ஓட்டல்கள், பேக்கரிகள், பெட்டிக் கடைகள் என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், அருகே உள்ள நொய்யல் ஆற்றில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததுடன், காருண்யா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடத்தில் குப்பைகளைக் கொட்டுவது ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த ஓராண்டாக அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது.
இதனிடையே, கடைகளின் குப்பைகளை கொட்டுவதற்கு காருண்யா பல்கலைக்கழகம் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், குப்பைகள் மீண்டும் நொய்யல் ஆற்றில் கொட்டுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காருண்யா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், சுமார் ஒரு டன் எடையுள்ள குப்பைகளை பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலின் முன்பு கொட்டினர். மேலும், கல்லூரி மாணவர்களுக்காக மட்டுமே இங்கு செயல்பட்டு வரும் கடைகளின் குப்பைகளை, காருண்யா பல்கலைக்கழகமே கையாள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
"காருண்யா பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் பெட்டி கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், நல்லூர்வயல் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் கொட்டப்பட்டது வந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, குப்பைகளை கொட்டுவதற்கு, பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான தனியார் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக அங்கு குப்பை கொட்டப்பட்டு வந்தது. தற்போது, அதற்கு அப்பல்கலைக்கழகம் தடை விதித்தது. எனவே, தக்க பாடம் புகட்டியுள்ளோம்," என்றார் சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த ராம்குமார்.
கோவை - சிறுவாணி சாலையின் காருண்யா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களுக்காக, அங்கு ஓட்டல்கள், பேக்கரிகள், பெட்டிக் கடைகள் என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், அருகே உள்ள நொய்யல் ஆற்றில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததுடன், காருண்யா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடத்தில் குப்பைகளைக் கொட்டுவது ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த ஓராண்டாக அந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது.
இதனிடையே, கடைகளின் குப்பைகளை கொட்டுவதற்கு காருண்யா பல்கலைக்கழகம் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், குப்பைகள் மீண்டும் நொய்யல் ஆற்றில் கொட்டுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காருண்யா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், சுமார் ஒரு டன் எடையுள்ள குப்பைகளை பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலின் முன்பு கொட்டினர். மேலும், கல்லூரி மாணவர்களுக்காக மட்டுமே இங்கு செயல்பட்டு வரும் கடைகளின் குப்பைகளை, காருண்யா பல்கலைக்கழகமே கையாள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
"காருண்யா பல்கலைக்கழகத்தைச் சுற்றிலும் ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் பெட்டி கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், நல்லூர்வயல் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் கொட்டப்பட்டது வந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, குப்பைகளை கொட்டுவதற்கு, பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான தனியார் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக அங்கு குப்பை கொட்டப்பட்டு வந்தது. தற்போது, அதற்கு அப்பல்கலைக்கழகம் தடை விதித்தது. எனவே, தக்க பாடம் புகட்டியுள்ளோம்," என்றார் சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த ராம்குமார்.