திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் முதல் வேட்பாளராக, தமிழ்நாடு கள் இயக்கத்தின் வேட்பாளர் கதிரேசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருப்பூர் : திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் முதல் வேட்பாளராக, தமிழ்நாடு கள் இயக்கத்தின் வேட்பாளர் கதிரேசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வடக்கு வருவாய் துறை அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் கதிரேசன், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களிடம் இருந்து துணிகளைப் பெற்று தைத்து தந்து வருகிறார்.
வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் கதிரேசன் பேசுகையில், "எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவது, விவசாய ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துதல், உணவுப் பொருளாக அங்கீகரித்தல், காவிரி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொள்கை ரீதியாக போட்டியிடுகிறேன். தமிழகத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே கள் இயக்கம் போட்டியிடுகிறது. அனைத்து மாநில மாவட்ட மக்கள் திருப்பூரில் ஒருங்கிணைந்து உள்ளதால் திருப்பூரை தேர்வு செய்துள்ளது," என்றார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வடக்கு வருவாய் துறை அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் கதிரேசன், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களிடம் இருந்து துணிகளைப் பெற்று தைத்து தந்து வருகிறார்.
வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் கதிரேசன் பேசுகையில், "எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவது, விவசாய ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துதல், உணவுப் பொருளாக அங்கீகரித்தல், காவிரி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொள்கை ரீதியாக போட்டியிடுகிறேன். தமிழகத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே கள் இயக்கம் போட்டியிடுகிறது. அனைத்து மாநில மாவட்ட மக்கள் திருப்பூரில் ஒருங்கிணைந்து உள்ளதால் திருப்பூரை தேர்வு செய்துள்ளது," என்றார்.