கோவை : சவுரிபாளையம் பகுதியில் ஓய்வு பெற்ற செவிலியரை நகைக்காக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : சவுரிபாளையம் பகுதியில் ஓய்வு பெற்ற செவிலியரை நகைக்காக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த விஜய் ஆனந்தனின் மனைவி மேரி ஏஞ்சலின் (70). இவர் சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்று, கோவையில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், மேலும், இவரது வீட்டு அருகே காலியாக இருக்கும் மற்றொரு வீட்டை வாடகைக்கு கேட்டு நேற்று இரவு சுமார் 9 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் முதியவர் மேரி ஏஞ்சலினை அணுகியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணை அவர் காலியான வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மேரி வீடு திரும்பாததால், கணவர் விஜய் ஆனந்தன் அவரைத் தேடிச் சென்று பார்க்கும் போது, அந்த வீட்டின் உள்ளே மேரியின் குரல்வளை அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தாலிச் செயின், கம்மல்கள், செல்போன் ஆகியவையும் காணவில்லை.
இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த கணவர் விஜயின் கதறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடினர். பின்னர், தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் சேர்ந்து வந்து வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டு சென்றுள்ளனர். இவர்கள்தான் இந்த கொலைக்கு காரணமானவர்கள் என்ற கோணத்தில் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த விஜய் ஆனந்தனின் மனைவி மேரி ஏஞ்சலின் (70). இவர் சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்று, கோவையில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், மேலும், இவரது வீட்டு அருகே காலியாக இருக்கும் மற்றொரு வீட்டை வாடகைக்கு கேட்டு நேற்று இரவு சுமார் 9 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் முதியவர் மேரி ஏஞ்சலினை அணுகியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணை அவர் காலியான வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மேரி வீடு திரும்பாததால், கணவர் விஜய் ஆனந்தன் அவரைத் தேடிச் சென்று பார்க்கும் போது, அந்த வீட்டின் உள்ளே மேரியின் குரல்வளை அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தாலிச் செயின், கம்மல்கள், செல்போன் ஆகியவையும் காணவில்லை.
இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த கணவர் விஜயின் கதறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடினர். பின்னர், தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் சேர்ந்து வந்து வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டு சென்றுள்ளனர். இவர்கள்தான் இந்த கொலைக்கு காரணமானவர்கள் என்ற கோணத்தில் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.