திருப்பூர் : வரும் நாடாளுமன்ற தேர்தலில், திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார்.
திருப்பூர் : வரும் நாடாளுமன்ற தேர்தலில், திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார்.
வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அ.தி.மு.க., இந்த தேர்தலை சந்திக்கிறது. நீலகிரி, திருப்பூர் உள்பட 20 இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதில், திருப்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் மற்றும் அ.ம.மு.க.வின் எஸ்.ஆர். செல்வம் ஆகியோரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் எம்.எஸ்.எம். ஆனந்தன் களமிறக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துளது.
எம்.எஸ்.எம்.ஆனந்தன் பற்றிய விபரம் :
1962-ம் ஆண்டு பிறந்த இவர், 1980-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கிளை கழக் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கை தொடங்கிய ஆனந்தன், நகர பனியன் சங்க செயலாளர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். 2001 முதல் திருப்பூர் நகர கழக செயலாளராகவும், 2011 முதல் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக் செயலாளராகவும் இருந்த அவர், 2011ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
பனியன் தொழிலுக்கு டையிங் பிரச்சனை வந்த போது, அதை முழு முயற்ச்சி எடுத்து தீர்வு கண்டார். தற்சமயம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இவர் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது, பெருமுயற்சி எடுத்து கொண்டுவரப்பட்டது. தற்போது, பிரதமர் அடிக்கல் நாட்டிய ஈ.எஸ்.ஐ மருத்துவமனை இடத்தையும் இவர் தேர்வு செய்து கொடுத்தது தான் என்பது குறிப்பபிடத்தக்கது.
வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அ.தி.மு.க., இந்த தேர்தலை சந்திக்கிறது. நீலகிரி, திருப்பூர் உள்பட 20 இடங்களில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதில், திருப்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் மற்றும் அ.ம.மு.க.வின் எஸ்.ஆர். செல்வம் ஆகியோரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் எம்.எஸ்.எம். ஆனந்தன் களமிறக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துளது.
எம்.எஸ்.எம்.ஆனந்தன் பற்றிய விபரம் :
1962-ம் ஆண்டு பிறந்த இவர், 1980-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கிளை கழக் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கை தொடங்கிய ஆனந்தன், நகர பனியன் சங்க செயலாளர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். 2001 முதல் திருப்பூர் நகர கழக செயலாளராகவும், 2011 முதல் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக் செயலாளராகவும் இருந்த அவர், 2011ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
பனியன் தொழிலுக்கு டையிங் பிரச்சனை வந்த போது, அதை முழு முயற்ச்சி எடுத்து தீர்வு கண்டார். தற்சமயம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இவர் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது, பெருமுயற்சி எடுத்து கொண்டுவரப்பட்டது. தற்போது, பிரதமர் அடிக்கல் நாட்டிய ஈ.எஸ்.ஐ மருத்துவமனை இடத்தையும் இவர் தேர்வு செய்து கொடுத்தது தான் என்பது குறிப்பபிடத்தக்கது.