பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் : 80-க்கும் மேற்பட்டோர் கைது

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், பொள்ளாச்சியில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பில் தடையை மீறி இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, போராட்டக்காரர்கள் பேசியதாவது :- பொள்ளாச்சியில் டாஸ்மாக் பார் தாக்கப்பட்டது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இரண்டு ஆண்டுகளாக அந்த பார் அனுமதியின்றி நடைபெற்று வந்துள்ளது. கோவை மாவட்ட காவல்துறையினர் இந்த வழக்கை மெத்தனமாக கையாண்டு இருக்கின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது திருநாவுக்கரசு வீட்டை சோதனையிடும் போது, இத்தனை நாட்கள் பொள்ளாச்சி போலீசார் அந்த வீட்டை சோதனை ஏன் செய்யவில்லை, என கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல, பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்தது தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய த.பெ.தி.க.,வினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். 

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...