கோவை : மதுரைக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோவை : மதுரைக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. குறிப்பாக தேர்தல் நாளான 18-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் வாக்குப்பதிவு குறையும் என்றும், தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்படும் என்றும் அஞ்சப்படுகிறது.
எனவே, சித்திரைத்திருவிழா நாளில் தேர்தல் நடத்துவதை எதிர்த்து பாஸ்கர் சாரதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்போது, மதுரைக்கு மட்டும் வாக்குப்பதிவை மாற்ற முடியாது. மதுரையைப் போன்று இந்தியா முழுவதும் கேட்டால் என்ன செய்வது..? எனக் கூறினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் தேர்தலை ஏன் ஒத்திவைக்கக் கூடாது..? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக, நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. குறிப்பாக தேர்தல் நாளான 18-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் வாக்குப்பதிவு குறையும் என்றும், தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்படும் என்றும் அஞ்சப்படுகிறது.
எனவே, சித்திரைத்திருவிழா நாளில் தேர்தல் நடத்துவதை எதிர்த்து பாஸ்கர் சாரதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்போது, மதுரைக்கு மட்டும் வாக்குப்பதிவை மாற்ற முடியாது. மதுரையைப் போன்று இந்தியா முழுவதும் கேட்டால் என்ன செய்வது..? எனக் கூறினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் தேர்தலை ஏன் ஒத்திவைக்கக் கூடாது..? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக, நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.