சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி விளக்கம் கேட்டு தமிழக டி.ஜி.பி.,க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி விளக்கம் கேட்டு தமிழக டி.ஜி.பி.,க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி விளக்கம் கேட்டு தமிழக டி.ஜி.பி., ராஜேந்திரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை தேவை என்றும், பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.