பொள்ளாச்சி விவகாரத்தில் வெளிப்படையான விசாரணைக்கு வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகை போராட்டம்

கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வெளிப்படையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.


கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வெளிப்படையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். 



பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் உள்பட ஏராளமான இளம்பெண்களை 4 பேர் கொண்ட பாலியல் வன்கொடுமை செய்தது. பின்னர், அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் மிரட்டி வந்துள்ளனர். இது தொடர்பாக, திருநாவுக்கரசு, சபரி ராஜன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.



இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு இளம்பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வெளிப்படையான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். 



Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...