கோவை : செல்வபுரம் பகுதியில் உறவினர் இருவருக்குள் நடந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : செல்வபுரம் பகுதியில் உறவினர் இருவருக்குள் நடந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செல்வபுரம் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (35). இவரும், இவரது மாமாவிற்கும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று வாக்குவாதம் முற்றியதில், இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, மைதீனை அவரது மாமா தள்ளிவிட்டுள்ளார். இதில், மைதீன் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மைதீனின் மாமாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த மைதீனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
செல்வபுரம் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (35). இவரும், இவரது மாமாவிற்கும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று வாக்குவாதம் முற்றியதில், இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, மைதீனை அவரது மாமா தள்ளிவிட்டுள்ளார். இதில், மைதீன் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மைதீனின் மாமாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த மைதீனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.