கோவை துடியலூரை அடுத்த வடமதுரை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து
கோவை: கோவை துடியலூரை அடுத்த வடமதுரை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து.
கோவை துடியலூர் அடுத்த வடமதுரை துணை மின் நிலையத்தில் இன்று இரவு திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனை அங்குள்ள ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்து காரணமாக கோவையில் நரசிம்மநாயக்கண்பாளையம், ஆர்.எஸ்.புரம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வீரபாண்டி பிரிவு என பெரும்பாலான இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
இந்த மின்வெட்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் சரிசெய்யப்படும் என மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.