கோவையில் நூதனமாக பெட்ரோல் திருடும் இளைஞர்கள்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தில் வரும் 2 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தில் வரும் 2 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 17-ஆம் தேதி மதிய நேரத்தில், வழக்கம் போல வீட்டின் வெளியே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்பு வெளியே கிளம்புவதற்காக இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் பொழுது இரு சக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. இதையடுத்து கணேஷ் பிரபு தனது இருசக்கர வாகனத்தை ஆராய்ந்தபோது வாகனத்திலிருந்த பெட்ரோல்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கணேஷ் பிரபு தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு படக்கருவியைப் பரிசோதனை செய்து பார்த்தார்.

அதில் நூதனமாக பெட்ரோல் திருடும் இளைஞர்கள் முதற்கட்டமாக டியூபை பிடுங்கி அதில் வாட்டர் கேன்-ஐ வைத்து விட்டுச் சென்று விடுகின்றனர். பின்னர் சிறிது நேரம் ஆனவுடன் பெட்ரோல் நிரம்பியதும் மீண்டும் அந்த பெட்ரோல் திருடும் இளைஞர்கள் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் பெட்ரோல் கேனை எடுத்துச் சென்று விடுகின்றனர். இந்த காட்சிகள் கண்காணிப்பு படக்கருவியில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. 



இந்த நிலையில், இந்த காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இவ்வாறு, வருங்கால இளைஞர்கள் ஒரு சிலர் தற்போது நூதனமாகத் திருடுவதில் தங்கள் திறமைகளைக் காட்டி வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...