அ.தி.மு.க. பொறுப்பில் இருந்து திடீரென கழற்றிவிட்டப்பட்ட கால்நடைத்துறை அமைச்சர் : கட்சியினரை ஒருங்கிணைத்து செல்லாததது தான் காரணமா..?

திருப்பூர் : நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணனின் கட்சி பொறுப்பைப் பறித்து பொள்ளாச்சி வி. ஜெயராமனிடம் கொடுத்ததற்கு, அ.தி.மு.க.வினர், பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர்.

திருப்பூர் : நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணனின் கட்சி பொறுப்பைப் பறித்து பொள்ளாச்சி வி. ஜெயராமனிடம் கொடுத்ததற்கு, அ.தி.மு.க.வினர், பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர். 

உடுமலை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புறநகர் மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி வி.ஜெயராமன் கடந்த 3 நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். கே.ராதாகிருஷ்ணனுக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர், சென்னையில் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். 

 

இது தொடர்பாக உடுமலைப்பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க.,வினர் சிலர் கூறியதாவது: வி.ஜெயராமன் பல தேர்தல்களை பார்த்தவர். பல இடைத்தேர்தல்களில் வேலை செய்தவர். மாநில தேர்தல் பிரிவு செயலாளராக, சிறப்பாக பணி செய்தவர். ஆனால், அவரது அனுபவம் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு கைகொடுக்கும் என அ.தி.மு.க., தலைமை நினைத்துள்ளது. அதன்படி, ஜெயராமனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், அணுகுமுறை என்பது வேறு வேறாகத்தான் உள்ளது. 

பொள்ளாச்சி எம்.பி.,யான மகேந்திரனை கூட அனுசரித்து செல்லாமல் இருப்பது, கட்சி மாறி வந்தவர்களுக்கு பதவி வழங்கியது, கட்சியின் சீனியர்களை அரவணைத்து செல்லாமல் இருப்பது என பதவி பறிப்புக்கான காரணங்கள் ஏராளம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு சென்று, மீண்டும் திரும்பி வந்த ஹக்கீமுக்கு, அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாவட்ட செயலாளர் பதவியை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பலத்த சிபாரிசு செய்ததால் கிடைத்தது. இப்படி பல்வேறு விஷயங்களை அடுக்கிக்கொண்டே சொல்லலாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி எம்.பி. தொகுதிக்கு தற்போதைய எம்.பி. மகேந்திரனே போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ள நிலையில், அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவரது வெற்றிக்கு எந்தளவுக்கு இறங்கி வேலை செய்வார் என்பதும் சந்தேகமாகவே இருந்தது. ஆனால், தற்போது புறநகர் மாவட்ட செயலாளர் பதவி மாற்றம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம், என்கின்றனர். 

இந்த நிலையில், புறநகர் புதிய மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், திருப்பூர் மாவட்ட புறநகர் பகுதியில் ஒன்றியச் செயலாளர்களை உற்சாகமாக சந்தித்து வருகிறார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்த ராதாகிருஷ்ணனை நீக்கிவிட்டு, அப்போதும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு இதே புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை அன்றைக்கு வழங்கியவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தரப்பினர் கூறியதாவது :- பொள்ளாச்சி ஜெயராமன், கோவையில் உள்ளார். திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் உள்ள சென்னிமலை 200 கி.மீ தொலைவில் உள்ளது. இன்றைக்கு அனைவரும் வந்து சென்னை தலைமை கழகத்தில் மனு அளித்தனர். அனைவரும் கட்சியில் தான் உள்ளோம். கட்சியில் சீனியர், ஜூனியர் என்று யாரையும் பார்ப்பதில்லை. இருவரும் சமூகம் ஒன்றாக இருந்தாலும், அரசியல் என்பது வேறு தானே,” என்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...