பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம், நகையை பறிக்கும் கும்பல் : பொள்ளாச்சியில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு இன்று கைது

கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம், நகையை கேட்டு மிரட்டும் கும்பலை சேர்ந்த 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.


கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம், நகையை கேட்டு மிரட்டும் கும்பலை சேர்ந்த 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதேபோல, இணையதளங்களின் மூலம் நடைபெறும் குற்றங்களும் அதிகரித்துள்ளது. இதில், சமூகவிரோதிகள் பணம் பறிக்கும் செயலில் இளம் பெண்களை குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியில் சமூக விரோத கும்பல் ஒன்று, இளம்பெண்களை, கல்லூரி மாணவிகளை குறிவைத்து முகநூலில் நட்பாக பழகி, பிறகு காதல் வசப்படுத்தி, ஆபாச படம் எடுத்து வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 



கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் 3 பேரை கைது செய்தனர். ஆனால், இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து வந்தார்.



இந்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு இன்று காலை பொள்ளாச்சியில் மாக்கினாம்பட்டியிலுள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...