ஈஷா மகாசிவராத்திரி விழா : காட்டு யானைகளினால் பாதிப்பு ஏற்பட்டால் வனத்துறை பொறுப்பேற்காது

கோவை : ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காட்டு யானைகளினால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் வனத்துறை பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காட்டு யானைகளினால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் வனத்துறை பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா அறக்கட்டளையின் சார்பில் இன்று மாலை 6 மணி முதல் மகாசிவராத்திரி கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவர் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். 

இந்த நிலையில், ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்றுள்ள பொதுமக்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, காட்டு யானைகளினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வனத்துறை பொறுப்பாகாது என கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி டி. வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கடந்த மாதம் 18-ம் தேதி ஈஷா யோகா அறக்கட்டளைக்கு கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார். மேலும், அதிக வெளிச்சமுடைய விளக்குகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிக ஒலி எழுப்பக் கூடிய வகையிலான ஒலிப் பெருக்கிகளை வனப்பகுதிகளுக்கு அருகே வைக்கக் கூடாது. அதோடு, வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பது போன்ற செயல்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"ஈஷா யோகா மையம் சார்பில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, யானைகளின் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கண்காணிப்பு கோபுரங்களிலும் குறைந்தபட்சம் 4 நபர்கள் இருப்பார்கள். அதோடு, தற்காலிக சோலார் மின்வேலிகள் வனப்பகுதிகளின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், தண்ணீர் மற்றும் உணவை தேடி வனப்பகுதியில் வெளியேறும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்," என்றார் வனத்துறை அதிகாரி டி. வெங்கடேஷ்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பொதுமக்கள் வனப்பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும் என்றும், குறிப்பாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...