கோவை மாநகராட்சியில் ரூ. 3.50 கோடியிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாநகராட்சியில் ரூ. 3 கோடியே 53 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கோவை : கோவை மாநகராட்சியில் ரூ. 3 கோடியே 53 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். 



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 92-வது வார்டு சுகுணாபுரம் கிழக்கு, ரெயின்போ காலனி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ. 82.50 லட்சம் மதிப்பில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணியினையும், ரெயின்போ காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 39.10 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணியையும் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதேபோல, செந்தமிழ்நகர் மற்றும் சுகுணாபுரம் கிழக்கு பள்ளிவாசல் வீதி பகுதியில் ரூ. 71.80 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், செந்தமிழ்நகர் பிரதான சாலையில் ரூ. 35 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், செந்தமிழ்நகர் சமுதாயகூடம் செல்லும் சாலைக்கு ரூ. 23 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் தடுப்பு சுவர் அமைக்கும் பணியினையும் அவர் ஆரம்பித்து வைத்தார். 

பின்னர், சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 17.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியினையும், சுகுணாபுரம் கிழக்கு செந்தமிழ்நகர் பகுதியில் ரூ. 84.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா சமுதாய நலக்கூடத்தினையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில், மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர். ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...