கோவை : தமிழக அரசால் வழங்கப்படும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான சிறப்பு நிதி ரூ. 2,000-த்தை பெறுவதற்காக கோவை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன.
கோவை : தமிழக அரசால் வழங்கப்படும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான சிறப்பு நிதி ரூ. 2,000-த்தை பெறுவதற்காக கோவை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ஒருமுறை ரூ. 2,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தினை நேற்று தொடங்கி வைத்தார்.
இதனிடையே, கோவை மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோவை ஊரக பகுதிகள், நகர்ப்புற பகுதிகள், மாநகராட்சி வார்டுகள் என பகுதி வாரியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு வளர்ச்சித் துறை (மகளிர்) தான் இந்த விண்ணப்பங்களை இ-மதி இணையதளம் மூலம் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கிறது.
இது குறித்து கோவை மாவட்ட திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) கூறுகையில் "கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் விண்ணப்பித்துள்ளன. இதில், கோவை ஊரக பகுதிகளில் இருந்து 3 லட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கோவை மாநகராட்சி பகுதிகளில் இருந்து 1 லட்சத்து 95 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. நகராட்சிகளில் இருந்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. டவுன் பஞ்சாயத்துகளிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்களை அரசாங்கத்தின் இ-மதி இணையதளத்தில் ஏற்றும் பணியானது நடைபெற்று வருகிறது," என்றார்.