திருப்பூர் : கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது வரை வீடு கட்டி தரவில்லை எனக் கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது வரை வீடு கட்டி தரவில்லை எனக் கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நெருப்பெரிச்சல் பகுதியில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் அவர்கள் வீடு கட்டிக் கொள்ளவும், அதற்கான நிதி இந்திராகாந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனிடையே, கடந்த 4 வருடங்களாக வீடு கட்டுவது காலம் தாழ்த்தி வருவதுடன், வீடுகட்டி கொடுக்க பணம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில், தங்களுக்கு வீடு கட்டி கொடுக்க உள்ள ஆணையின்படி, உடனடியாக பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் சமாதான பேசியதையடுத்து, ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து, அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நெருப்பெரிச்சல் பகுதியில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் அவர்கள் வீடு கட்டிக் கொள்ளவும், அதற்கான நிதி இந்திராகாந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனிடையே, கடந்த 4 வருடங்களாக வீடு கட்டுவது காலம் தாழ்த்தி வருவதுடன், வீடுகட்டி கொடுக்க பணம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில், தங்களுக்கு வீடு கட்டி கொடுக்க உள்ள ஆணையின்படி, உடனடியாக பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் சமாதான பேசியதையடுத்து, ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து, அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.