கோவையில் வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் : வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல்

கோவை : கோவை மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் கோவை, சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பதோடு, அனல் காற்று வீசக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் மரகதம் கூறியதாவது :- இம்மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவையைப் பொறுத்தவரை, அதிகபட்ச வெப்பநிலை மேலும் சிலபுள்ளிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது, 35.5 டிகிரி செல்சியசாக உள்ள அதிகபட்ச வெப்பநிலை, அடுத்த சில நாட்களுக்கு 37 அல்லது 38 ஆக உயர வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்தபட்ச வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. 

சுமார் 21 டிகிரி முதல் 22 டிகிரி வரை காணப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலை, தற்போது 24 டிகிரி செல்சியசாக உயர்ந்துள்ளது. இதனால் தான் வெப்பம் அதிக அளவில் உணரப்படுகிறது, என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...