கோவை : கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த வெள்ளிங்கிரியின் மகன் அருண்குமார் (35). இவர், துடியலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில், கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார்.
இவர் சிறைக்கு வந்ததிலிருந்தே சக கைதிகளிடம் கூட பேசாமல் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மதியம் 12.30 மணிக்கு கைதி அருண்குமார் ஷேவிங் செய்ய பயன்படும் லேஷர் பிளேடை கொண்டு கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அருகில் இருந்த சிறைத்துறை காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் இருந்த கைதியை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தற்போது, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறைத் துறை மற்றும் பந்தய சாலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.