மகாசிவராத்திரி கொண்டாட்டம் : வெள்ளிங்கிரி மலையை இரவு பகலாக தூய்மைப்படுத்தும் தன்னார்வலர்கள்

கோவை : மகாசிவராத்திரியை முன்னிட்டு வெள்ளிங்கிரி மலையை வனத்துறையினருடன் ஏராளமான தன்னார்வலர்கள் இணைந்து இரவு, பகலாக தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கோவை : மகாசிவராத்திரியை முன்னிட்டு வெள்ளிங்கிரி மலையை வனத்துறையினருடன் ஏராளமான தன்னார்வலர்கள் இணைந்து இரவு, பகலாக தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

தென்கயிலாயம் எனப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் மகாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு மகாசிவராத்திரி என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க வெள்ளிங்கிரி மலைக்கு குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, வனத்துறையினருடன் இணைந்து 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வெள்ளிங்கிரி மலையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 



மலைப்பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட பல்வேறு கழிவுப் பொருட்களை அவர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க வரும் பக்தர்களிடமும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஏதேனும் இருக்கின்றதா..? என தன்னார்வலர்கள் சோதனை செய்து அனுப்புகின்றனர். அப்போது, தடையை மீறி மதுபாட்டில்கள் மற்றும் புகையிலை போன்றவை சில பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். 

"வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. அவர்களில் சிலரிடம் மதுபாட்டில்கள் மற்றும் புகையிலை இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. விலங்குகள் வசிக்கும் இடம்தான் வனப்பகுதி என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, வனத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும்," என்றார் தன்னார்வலர்.

இந்த தன்னார்வலர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக, அதாவது 5-ம் தேதி வரை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் தங்கி தூய்மைப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பம்ப் மோட்டார்கள் நிறுவப்பட்டுள்ளன. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...