கோவை : 'மதம் சார்ந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கு நாட்டின் உயர்பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் செல்வது அறமற்ற செயல்!' என தி.மு.க., வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
கோவை : 'மதம் சார்ந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கு நாட்டின் உயர்பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் செல்வது அறமற்ற செயல்!' என தி.மு.க., வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
ஈஷா யோகா மையம் நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியிலிருந்து நேற்று கோவை வந்துள்ளார். ஈஷா மையத்தில் இன்று இரவு நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.
இதனைக் கடுமையாக விமர்சித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முரசொலி நாளிதழில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 'சிவராத்திரி நிகழ்ச்சிக்கு இவர் சாதாரண மனிதராகச் சென்றால் நமக்கு எந்த சிக்கலும் இல்லை. தனிப்பட்ட ஒரு சந்நியாசி - பணக்கார சந்நியாசி - புதிர்கள் பல விடுபடாத சந்நியாசி நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு, அவர் நடத்தும் வழிபாட்டிற்கு மதச் சார்பற்ற நாட்டின் குடியரசுத் தலைவர் செல்வதும், அங்கே வழிபடுவதும் சரியானதுதானா..?, அது ஏற்புடையதுதானா..?. பிரதமர் போயிருக்கக் கூடும். அதையும் சரியானது என்று ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. இதற்கு ஆகும் செலவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்,' எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், 'மத்திய பா.ஜ.க. அரசிடம் செல்வாக்குப் பெற்ற சந்நியாசியாக 'ஜக்கி' இருந்தாலும் பிரதமரைவிட குடியரசுத் தலைவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளப் பெரிதும் யோசித்து இருக்க வேண்டியவர்', 'ஆதியோகி என்று சொல்லிக் கொண்டு பகட்டு சந்நியாசியின் கட்டடப் பர்ணச் சாலையில் ஆனந்த தாண்டவம் (?) நிகழ்கிறது. அதைப் பார்க்க குடியரசுத் தலைவர் டெல்லியிலிருந்து வந்து செல்கிறார். இனி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமது பதவிக் காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பது பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க உதவும் என்பதே நமது எண்ணம்.' என ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெறும் குடியரசுத் தலைவரை விமர்சித்துள்ளது.
ஈஷா யோகா மையம் நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியிலிருந்து நேற்று கோவை வந்துள்ளார். ஈஷா மையத்தில் இன்று இரவு நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.
இதனைக் கடுமையாக விமர்சித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முரசொலி நாளிதழில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 'சிவராத்திரி நிகழ்ச்சிக்கு இவர் சாதாரண மனிதராகச் சென்றால் நமக்கு எந்த சிக்கலும் இல்லை. தனிப்பட்ட ஒரு சந்நியாசி - பணக்கார சந்நியாசி - புதிர்கள் பல விடுபடாத சந்நியாசி நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு, அவர் நடத்தும் வழிபாட்டிற்கு மதச் சார்பற்ற நாட்டின் குடியரசுத் தலைவர் செல்வதும், அங்கே வழிபடுவதும் சரியானதுதானா..?, அது ஏற்புடையதுதானா..?. பிரதமர் போயிருக்கக் கூடும். அதையும் சரியானது என்று ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. இதற்கு ஆகும் செலவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்,' எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், 'மத்திய பா.ஜ.க. அரசிடம் செல்வாக்குப் பெற்ற சந்நியாசியாக 'ஜக்கி' இருந்தாலும் பிரதமரைவிட குடியரசுத் தலைவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளப் பெரிதும் யோசித்து இருக்க வேண்டியவர்', 'ஆதியோகி என்று சொல்லிக் கொண்டு பகட்டு சந்நியாசியின் கட்டடப் பர்ணச் சாலையில் ஆனந்த தாண்டவம் (?) நிகழ்கிறது. அதைப் பார்க்க குடியரசுத் தலைவர் டெல்லியிலிருந்து வந்து செல்கிறார். இனி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமது பதவிக் காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பது பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க உதவும் என்பதே நமது எண்ணம்.' என ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெறும் குடியரசுத் தலைவரை விமர்சித்துள்ளது.