நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீலகிரி மாவட்ட நீதிமன்றம், சயான், மனோஜ் உட்பட 5 பேருக்கான காவலையும் நீட்டித்து உத்தரவிட்டது.
நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீலகிரி மாவட்ட நீதிமன்றம், சயான், மனோஜ் உட்பட 5 பேருக்கான காவலையும் நீட்டித்து உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் இருந்த நிலையில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் கோடநாடு கொலை சம்பவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

முதலமைச்சர் மீது அவதூறு தெரிவித்துள்ளதால், இருவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. அப்போது, சயான் மற்றும் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், இருவரின் ஜாமீனை ரத்து செய்த நீதிபதி பி.வடமலை, இருவரையும் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
இதையடுத்து, சயான் மற்றும் மனோஜ் தலைமறைவாகினர். இவர்களை பிடிக்க நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இருவரையும் கடந்த மாதம் 25-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சயான் மற்றும் மனோஜ் இருவரும் சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் நடமாடி வந்ததை போலீஸார் கண்காணித்து வந்தனர். பின்னர், நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார், நேற்று முன்தினம், சயான் மற்றும் மனோஜை கேரளாவில் வைத்து கைது செய்தனர். அவர்களை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பி வடமலை உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பி. வடமலை வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், சிறையில் இருந்தவர்களின் காவலையும் 18-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார். இதன்பேரில், சயான், மனோஜ், மனோஜ்சாமி, பிஜின்குட்டி, தீபு ஆகியோரை போலீஸார் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் இருந்த நிலையில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் கோடநாடு கொலை சம்பவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

முதலமைச்சர் மீது அவதூறு தெரிவித்துள்ளதால், இருவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. அப்போது, சயான் மற்றும் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், இருவரின் ஜாமீனை ரத்து செய்த நீதிபதி பி.வடமலை, இருவரையும் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
இதையடுத்து, சயான் மற்றும் மனோஜ் தலைமறைவாகினர். இவர்களை பிடிக்க நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இருவரையும் கடந்த மாதம் 25-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சயான் மற்றும் மனோஜ் இருவரும் சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் நடமாடி வந்ததை போலீஸார் கண்காணித்து வந்தனர். பின்னர், நீலகிரி மாவட்ட தனிப்படை போலீஸார், நேற்று முன்தினம், சயான் மற்றும் மனோஜை கேரளாவில் வைத்து கைது செய்தனர். அவர்களை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பி வடமலை உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பி. வடமலை வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், சிறையில் இருந்தவர்களின் காவலையும் 18-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார். இதன்பேரில், சயான், மனோஜ், மனோஜ்சாமி, பிஜின்குட்டி, தீபு ஆகியோரை போலீஸார் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.