கோவைக்கு வருகை புரிந்த குடியரசு தலைவரை வரவேற்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : ஈஷா மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை விமானநிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வரவேற்றார்.

கோவை : ஈஷா மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவை வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை விமானநிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வரவேற்றார்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழாவானது நாளை மாலை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவானது மாலை 6 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 6 மணி வரை மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையொட்டி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை கோவை வந்தார். அவரை கோவை விமானநிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், அவர் பந்தயசாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். 

நாளை காலை கார் மூலம் சூலூர் விமானப் படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறந்த சேவைக்கான விருதுகளை வழங்குகிறார். பின்னர், மீண்டும் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்து விட்டு மாலை மீண்டும் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். அங்கு மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இரவு கோவை திரும்பி அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பின்னர், செவ்வாய்கிழமை காலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார். 

இந்த நிலையில், குடியரசு தலைவர் கோவை வருவதையொட்டி, மாவட்டத்தில் மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் என மொத்தம் 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விமான நிலையம், அரசு விருந்தினர் மாளிகை, சூலூர் விமானப்படை தளம், குடியரசு தலைவர் கார் செல்லும் வழித்தடங்கள் என அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. குடியரசு தலைவர் பயணிப்பதற்காக குண்டு துளைக்காத கார் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...