வால்பாறையில் தாவரவியல் பூங்கா மற்றும் படகுத்துறை அமைக்கப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை : வால்பறையில் சுற்றுலா மேம்பாடு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், தாவரவியல் பூங்கா மற்றும் படகுத்துறை அமைக்கப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நாட்டினார்.

கோவை : வால்பறையில் சுற்றுலா மேம்பாடு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், தாவரவியல் பூங்கா மற்றும் படகுத்துறை அமைக்கப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நாட்டினார்.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. 

இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நகராட்சிப் பகுதியில் ரூ. 5 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா மற்றும் ரூ. 2 கோடி மதிப்பில் படகுதுறை அமைக்கவும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு 112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- கோவை மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் வால்பாறையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வில் வளம்பெறும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

அரசு பொறுப்பேற்றதிலிருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில், இரண்டுமுறைக்கு மேல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வினை வழங்கியது அம்மா அவர்களின் அரசு, மேலும், கடந்த ஓரு ஆண்டுகளாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வினைப் பொருத்தவரையில் அனைத்து இடற்பாடுகளையும் தகர்த்து முதலமைச்சர் அவர்களே, நேரடியாக தலையிட்டு நமது கோரிக்கையை ஏற்று இன்றையதினம் ரூ. 5 ஊதிய உயர்வாக பெற்றுத் தந்துள்ளார். இவ்வாறு தமிழக அரசு நகரங்களில் மட்டுமல்ல, கடைகோடி மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் அரசாக விளங்கி வருகின்றது. 

வால்பாறைக்கு சுற்றுலாவிற்கு வரும் மக்களைக் கருத்தில் கொண்டும், இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கக்கூடிய வகையில் தவாரவியல் பூங்கா, படகுதுறை உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது. 

இதன்மூலம், வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக வேலைவாய்ப்பளிக்கவும், நீடித்த பொருதார முன்னேற்றம் பெறும் சூழலும் உருவாகும், இவ்வாறு கூறினார். 

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், பொள்ளாச்சி கோட்டாட்சியர் ரவிக்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...