திருப்பூர் : பாரதிய ஜனதா கட்சியின் ஐந்தாண்டு சாதனை விளக்கும் வகையிலான இருசக்கர வாகனப் பேரணி பல்லடத்தில் நடைபெற்றது.
திருப்பூர் : பாரதிய ஜனதா கட்சியின் ஐந்தாண்டு சாதனை விளக்கும் வகையிலான இருசக்கர வாகனப் பேரணி பல்லடத்தில் நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சியின் ஐந்தாண்டு சாதனையை விளக்கும் இருசக்கர வாகனப்பேரணி திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அக்கட்சியின் கோவை நாடாளுமன்ற தொகுதி மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இப்பேரணி, பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் தொடங்கி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பொங்கலூர், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், வீரபாண்டி பகுதியின் வழியாக சென்று மங்கலம் இடுவாயில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பா.ஜ.க.,வினர் பங்கேற்றனர். இதில், சில பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்தபடி பேரணியில் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் ஐந்தாண்டு சாதனையை விளக்கும் இருசக்கர வாகனப்பேரணி திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அக்கட்சியின் கோவை நாடாளுமன்ற தொகுதி மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இப்பேரணி, பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் தொடங்கி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பொங்கலூர், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், வீரபாண்டி பகுதியின் வழியாக சென்று மங்கலம் இடுவாயில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பா.ஜ.க.,வினர் பங்கேற்றனர். இதில், சில பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்தபடி பேரணியில் கலந்து கொண்டனர்.