பின்னலாடைத் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிமுகம் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வரவேற்பு

திருப்பூர் : பின்னலாடை துறையை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில், இதற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.


திருப்பூர் : பின்னலாடை துறையை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில், இதற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

திருப்பூர், லூதியானா மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் பிரபலமான பின்னலாடை தொழில்துறையை மேம்படுத்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி, பல்வேறு விரிவான திட்டங்களை வீடியோ கான்பிரசின்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜா எம். சண்முகம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்திய திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்து கொள்கிறேன். 2022-ம் ஆண்டில் ரூ. 1,00,000 கோடி இலக்கை அடைய முடியும். மேலும், இந்த திட்டங்கள் திருப்பூரில் உள்ள சிறு, குறு பின்னலாடை தொழில் நிறுவனங்கள் நிதியளவிலும், பயன்பாட்டு அளவிலும் பெரிதும் உதவிகரமாக இருக்கும். அதோடு, திருப்பூரில் உள்ள தொழில்முனைவோர்களுக்கு பெரிதும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது, என்றார். மேலும், வட்டியில்லா வங்கிக்கடன் திட்டமான யார்ன் வங்கி திட்டத்தில் ரூ. 200 கோடி வரையிலான முதலீட்டுக் கடன் வசதிக்கும், சோலார் சக்தி திட்டத்திற்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...