புதியவர் நகரில் குப்பைக் கூளங்களுக்கு தீவைத்த மர்ம நபர்கள் : தீயைக் கட்டுப்படுத்திய தீயணைப்புத் துறை

கோவை : புதியவர் நகர் பகுதியில் குப்பைக் கூளங்களுக்கு மர்ம நபர்கள் வைத்த தீயினை, குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாதவாறு தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

கோவை : புதியவர் நகர் பகுதியில் குப்பைக் கூளங்களுக்கு மர்ம நபர்கள் வைத்த தீயினை, குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாதவாறு தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.



ராமகிருஷ்ணா கல்லூரி அருகே உள்ள புதியவர் நகர் பகுதியின் குப்பைகள் ஒரு இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தக் குப்பை மேட்டில் சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால், பிளாஸ்டிக் உள்பட பல்வேறு கழிவுகளை உள்ளடக்கிய குப்பை மேடு கொளுந்து விட்டு எரிந்தது. பின்னர், மெதுவாக அருகே இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவியது. 



இதையடுத்து, இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விரைந்து, வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...